Published : 13 Jun 2017 01:18 PM
Last Updated : 13 Jun 2017 01:18 PM

மக்களுக்கு சேவை செய்யாமல் விளையாடுகிறீர்கள்: அதிமுக எம்எல்ஏக்கள் மீது குஷ்பு காட்டம்

"மக்களுக்கு சேவை செய்யவே நீங்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் தவிர இசை நாற்காலி விளையாட்டு விளையாடுவதற்காக அல்ல" என்று அதிமுக எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு விமர்சித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்லாமல் இருக்க கூவத்தூரில் தங்கியிருந்த எம்எல்ஏக்களுக்கு பணம் தரப்பட்டதாக மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசியதாக நேற்று வீடியோ பதிவு ஒன்று வெளியானது. தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட இந்த வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், "பணம் மற்றும் பதவி ஆசையில் அதிமுக எம்எல்ஏக்கள் இசை நாற்காலி விளையாட்டு விளையாடி வருகின்றீர்கள். நீங்கள் மக்களுக்கு பணியாற்றுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்.விளையாடுவதற்காக அல்ல.

அதிமுக எம்எல்ஏக்கள் தமிழகத்துக்கு எதையும் கொண்டுவரவில்லை. ஆனால் அவமானத்தை கொண்டு வந்துள்ளீர்கள்.

நான் உறுதியாக கூறுகிறேன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதனை நிச்சயம் விரும்பமாட்டார்" என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x