

ராமநாதபுரம் மாவட்டத்தில் முத்து ராமலிங்கத் தேவர், இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சி களை முன்னிட்டு இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11 அன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம், அக்டோபர் 30-ல் கமுதி பசும்பொன்னில் முத்துரா மலிங்கத் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு, இன்று (செப் டம்பர் 9) முதல் 2 மாதங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் பிறப்பித்தார்.
அதன்படி பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்தவும், 5 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதற் கும் தடை விதிக்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் உள்ளிட்டவை பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி பெற வேண்டும்.
மேலும் செப்டம்பர் 9 முதல் 15-ம் தேதி வரையும், அக்டோபர் 25 முதல் 31-ம் தேதி வரையும், வெளி மாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள், சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள், மோட் டார் சைக்கிள்கள், ஆட்டோக் களில் தலைவர்களின் நினைவிடங் களுக்கு அஞ்சலி செலுத்த வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நினைவிடங் களுக்கு 1 கிலோ மீட்டருக்குள் மட்டுமே மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று ஜோதி எடுத்து வர வேண்டும். மேலும் அஞ்சலி செலுத்த வரும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் செல்ல வேண்டும்.
செப்டம்பர் 11 இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வரும் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்ல வேண்டும்.
நினைவிடத்தில் மாலை 4 மணிக்குள் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.