Published : 05 Aug 2016 09:09 AM
Last Updated : 05 Aug 2016 09:09 AM

சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜர்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தனது மனைவி, மகனுடன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத் தூர் தொகுதி திமுக எம்எல்ஏ வும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி மீது வருமானத் துக்கு அதிகமாக 1.7 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக திண் டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். வழக் கில் அவரது மனைவி, 2 மகன் கள் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள் ளனர். இந்த வழக்கு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மனைவி சுசீலா, மகன் பிரபு ஆகியோர் நேரில் ஆஜராகினர். மற்றொரு மகனான பழநி தொகுதி எம்எல்ஏ செந்தில்குமார் ஆஜராகவில்லை.

இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அசோகன் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x