போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதிக்குள் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அரசுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத ஓய்வூதியம் இதுவரை வழங்கப்படவில்லை. ஓய்வூதியம் கோரி மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக அலுவல கங்களில் ஓய்வூதியதாரர்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சம்மேளனம், போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற வர்கள் நலச் சங்கம் சார்பில் ஓய்வூதியம் கோரி உயர் நீதிமன்ற கிளையில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அந்த மனுவில், “அரசு போக்கு வரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் 2005-ல் 9 சதவீதமாகவும், 2007-ல் 12 சத வீதமாகவும் உயர்த்தியிருக்க வேண்டும். இது தொடர்பாக 22.1.2011-ல் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இருப்பினும் இதுவரை உயர்த்தப்பட்ட ஓய்வூதியப் பணப் பலன்கள் வழங்கப்படவில்லை. திருத்தியமைக்கப்பட்ட ஓய்வூ தியப் பலன்கள் 2011-ல் இருந்து நிலுவையில் உள்ளது. போக்குவரத்துக் கழக ஓய்வூதி யர்களுக்கு ஓய்வூதியத்தை தடையின்றி வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இந்த விசாரணையின்போது அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதிக்குள் ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்து அடுத்த விசாரணையை ஏப்ரல் 12-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in