Published : 09 Nov 2013 11:51 PM
Last Updated : 09 Nov 2013 11:51 PM

பிரதமர் பங்கேற்காதது ஆறுதலானது: கருணாநிதி

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்காமல் இருப்பது ஓரளவு ஆறுதல் அளிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.



இது குறித்து சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, திமுகவின் குரலுக்கு மதிப்பளித்து, பிரதமர் மாநாட்டில் பங்கேற்காமல் இருப்பது ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கிறது என்றார்.

அதேவேளையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்பது விவாதத்துக்குரியது என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவில் இருந்து சிறுதுரும்புகூட செல்லக் கூடாது என்று கருணாநிதி வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழகத்தின் எதிர்ப்பை மீறி, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், அதற்கான விளைவுகளை சம்பந்தப்பட்டவர்கள் சந்திப்பார்கள் என்று ஏற்கெனவே அவர் எச்சரித்திருந்ததும் நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x