Published : 02 Jan 2017 09:27 AM
Last Updated : 02 Jan 2017 09:27 AM

ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும்: போட்டி அமைப்பினர் நம்பிக்கை

கடந்த 2 ஆண்டுகளாக தடை பட்டுப் போன ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நிச்சயம் நடக்கும் என்று நம்புவதாக மாநில ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் பி.ராஜே சேகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளைப் போல ஜல்லிக்கட்டு திருவிழா இந்தாண்டும் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக அலங்காநல்லூரில் கிராமத்தினர் ஹோமம் நடத்தி வழிபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு நடக்க மத்திய அரசு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக ஜல்லிக்கட்டுப் பேரவையின் மாநிலத் தலைவர் பி.ராஜசேகரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிச்சயமாக நடக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக் கிறது. அதற்காக மத்திய, மாநில அரசுகள் எடுத்துவரும் நடவடிக் கைகள் நல்ல அறிகுறியாக உள்ளன. உச்ச நீதிமன்றமே நிபந்தனைகளோடு ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கொடுத்துவிடும் என ஆவலோடு எதிர்பார்க்கிறோம். உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டாவிட்டால், ஜல்லிக்கட்டுக் காக மத்திய அரசு அவசர சட்டம் நிறைவேற்றிக் கொடுக்கும் என எதிர்பார்க்கிறோம். இதற்கு தமிழக அரசும் அழுத்தம் கொடுத்து வருகிறது.

ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கையால் மதுரையில் அவ னியாபுரம், பாலமேடு, அலங்கா நல்லூர் உட்பட தமிழகம் முழு வதும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகி றோம். காளை மாடுகளும், மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டுக்காக தயாராகி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x