Published : 21 Apr 2017 04:07 PM
Last Updated : 21 Apr 2017 04:07 PM
பழனிசாமி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த விரைவில் குழு அமைக்கப்படும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தொண்டர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பழனிசாமி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்களும் விரைவில் ஒரு குழுவை அமைக்க உள்ளோம். அந்த கமிட்டியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை விரைவில் அறிவிப்போம்'' என்றார்.
முன்னதாக, தினகரன் கட்சியிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்த பிறகு, ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் விரைவில் இணையும் என்ற பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது. இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் அடிப்படையில் ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்து. இக்குழுவில் வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், வீரமணி, தங்கமணி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பழனிசாமி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த விரைவில் குழு அமைக்கப்படும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT