Published : 25 Mar 2017 10:20 AM
Last Updated : 25 Mar 2017 10:20 AM

வேலை வாங்கி தருவதாக மோசடி: என்எல்சி முன்னாள் ஊழியர் கைது

கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் அடுத்த மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம்(49). இவர் என்எல்சி நிறுவனத்தில் சுரங்க பொறியாளராக இருந்தார்.

இவர், என்எல்சியில் நிரந்தர பணி வாங்கித் தருவதாகக் சிலரிடம் பணம் வாங்கியுள்ளார். பணம் கொடுத்தவர்கள் வேலை குறித்து கேட்டபோது, விரைவில் பணி ஆணை வந்துவிடும் என கூறி, காலம் கடத்தி வந்துள்ளார். இதுகுறித்த புகாரால் என்எல்சி நிர்வாகம், 4 ஆண்டுகளுக்கு முன் முருகானந்தத்தை பணியிடை நீக்கம் செய்தது. இதையடுத்து அவர் தலைமறைவானார்.

இது தொடர்பாக குறவனக் குப்பத்தைச் சேர்ந்த திருமால், மந்தாரக்குப்பம் காவல் நிலை யத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் ஆரோக்கியராஜ் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் முருகானந்தத்தை கைது செய்தார்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “என்எல்சியில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் முருகானந்தம் ரூ.1 கோடி வரை பணம் வாங்கியுள்ளார் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x