Published : 13 Jun 2017 12:09 PM
Last Updated : 13 Jun 2017 12:09 PM

அதிமுகவில் பேரம்: ட்விட்டரில் கலாய்த்த திமுக எம்.எல்.ஏ

கூவத்தூரில் தங்கியிருந்த எம்எல்ஏக்களுக்கு பணம் தரப்பட்டதாக மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசியதாக நேற்று வீடியோ பதிவு ஒன்று வெளியானது. தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட இந்த வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இச்செய்தி வெளியானது முதல் ட்விட்டரில் #MLAsForSale என்ற ஹேஷ்டேக் கீழ் பலரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஓர் அரசு மக்களால் மக்களுக்காக இருத்தல் வேண்டும் ஆனால் அதிமுக அரசோ பணத்தால் பணத்துக்காக இருக்கிறது என்று பொருள்படும் வகையில் ட்வீட் செய்திருந்தார்.

அதேபோல் ஜெ.அன்பழகனை ட்விட்டரில் பின்பற்றும் நபர் ஒருவர் How to Activate the TN Governor? (தமிழக ஆளுநரை செயல்பட வைப்பது எப்படி?) எனக் கிண்டலாகக் கேள்வி எழுப்ப அதற்கு ..

செயல்முறை விளக்கம்:

> இரு சிம் கார்டுகள் கூடிய மொபைல் வாங்கவும்

> ஒரு சிம் தமிழ்நாட்டுக்கு மற்றொன்று மகாராஷ்டிராவுக்கு

> டெல்லியில் தேசிய ரோமிங் என சிம்மை முடுக்கிவிடவும்

> பின்னர் பாஜக என டயல் செய்தால் மொபைல் செயல்படும்

இவ்வாறு கிண்டலாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மகாராஷ்டிராவின் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x