Published : 22 Jun 2016 08:05 AM
Last Updated : 22 Jun 2016 08:05 AM

சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, கோவைக்கு சிறப்பு ரயில்கள்

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மதுரை - சென்னை எழும்பூர் இடையே (வண்டி எண்.06020) சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் ஜூலை 1 மற்றும் 8-ம் தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மதுரையில் இருந்து காலை 10 மணிக்குப் புறப்பட்டு மாலை 6.50 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் (06019) ஜூலை 4 மற்றும் 11-ம் தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 6.15 மணிக்குப் புறப்பட்டு மாலை 3 மணிக்கு மதுரை சென்றடையும்.

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே (வண்டி எண்.06001) சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் வரும் ஜூலை 1-ம் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் (06002) ஜூலை 3-ம் தேதியன்று திருநெல்வேலியில் இருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

கோவை - சென்னை சென்ட்ரல் இடையே (வண்டி எண்.06022) சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் வரும் ஜூலை 1, 8-ம் தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கோவையில் இருந்து காலை 11 மணிக்குப் புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் (06021) ஜூலை 4, 11-ம் தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.30 மணிக்குப் புறப்பட்டு மாலை 6 மணிக்கு கோவை சென்றடையும்.

சென்னை சென்ட்ரல் - எர்ணா குளம் இடையே (வண்டி எண். 06005) சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் வரும் ஜூலை 1-ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் இந்த ரயில் (06006) ஜூலை 3-ம் தேதியன்று எர்ணாகுளத்தில் இருந்து இரவு 7 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். மேற்கண்ட ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே (வண்டி எண்.06016) சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் வரும் ஜூலை 7, 14-ம் தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 8.10 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

மறுமார்க்கத்தில் இந்த ரயில் (06015) ஜூலை 8, 15-ம் தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து மதியம் 2.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். மேற்கண்ட ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x