Published : 14 Jul 2016 09:24 AM
Last Updated : 14 Jul 2016 09:24 AM
சென்னை மணலி எட்டியப்பன் தெருவை சேர்ந்தவர் ரா.ஞான சேகர் (50). சென்னை மாநகராட்சி 21-வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்தார். கடந்த 9-ம் தேதி மாலை மணலி பாடசாலை பகுதியில் உள்ள தனது நண்பரின் கடையில் இருந்த இவரை 2 பைக்கில் வந்த 5 பேர் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர். இதுபற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து 5 பேரை கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்படி மாதவரத்தை சேர்ந்த முத்துராஜ், மணலியை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி குதிரை வெங்கடேஷ் என்பவரை, மணலியில் வீட்டில் பதுங்கியிருந்தபோது போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT