Published : 06 Mar 2017 07:10 PM
Last Updated : 06 Mar 2017 07:10 PM
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் எதையும் மறைக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது என தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஜெயலலிதா சிகிச்சை குறித்த அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையின் அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
அறிக்கைகளை வெளியிட்ட பின் ராதாகிருஷ்ணன் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ''மாநில அரசின் கோரிக்கையின் அடிப்படையில்தான் எய்ம்ஸ் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த எய்ம்ஸ் மருத்துவமனையின் 5 அறிக்கைகள் வெளியிடப்பட்டன. தேவையற்ற வதந்திகளை அழிப்பதற்காக தெளிவான அறிக்கை அளித்துள்ளோம்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் எதையும் மறைக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT