Published : 01 Apr 2017 09:54 AM
Last Updated : 01 Apr 2017 09:54 AM
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றியவர் வேல்முருகன். இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர்.
ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதால் சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தி கடந்த 3 வாரங்களுக்கு முன்பு ஜான் பென்னிகுவிக் மணிமண்டபத் தில் உண்ணாவிரதம் இருந்தார்.
இவர் தேனி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். ஆனால் பணிக் குச் செல்லாமல் விருப்ப ஓய்வு கேட்டு காவல் கண்காணிப்பாள ரிடம் மனு கொடுத்தார். இந் நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டவருக்கு நேற்று கட்டாய பணி ஓய்வு வழங்கி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT