Published : 01 Apr 2017 09:54 AM
Last Updated : 01 Apr 2017 09:54 AM

அதிமுக ஆதரவு காவலருக்கு கட்டாய ஓய்வு

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றியவர் வேல்முருகன். இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர்.

ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதால் சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தி கடந்த 3 வாரங்களுக்கு முன்பு ஜான் பென்னிகுவிக் மணிமண்டபத் தில் உண்ணாவிரதம் இருந்தார்.

இவர் தேனி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். ஆனால் பணிக் குச் செல்லாமல் விருப்ப ஓய்வு கேட்டு காவல் கண்காணிப்பாள ரிடம் மனு கொடுத்தார். இந் நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டவருக்கு நேற்று கட்டாய பணி ஓய்வு வழங்கி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x