மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் படிப்படியாக அமைக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் படிப்படியாக அமைக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு
Updated on
1 min read

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் திமுக உறுப் பினர் டி.செங்குட்டுவன் (கிருஷ்ண கிரி), அதிமுக உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் (பர்கூர்) ஆகியோர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:

மருத்துவக் கல்லூரி இல் லாத மாவட்டங்களில் உள்ள 16 மாவட்ட அரசு தலைமை மருத் துவமனைகளில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இணையான வசதிகளை ஏற் படுத்த கடந்த 19-5-2014-ல் ரூ.78 கோடியே 89 கோடி ஒதுக்கப்பட் டது. இதில் கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரூ.4 கோடியே 27 லட்சம் வழங் கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தற்போது 21 அரசு மருத்துவக் கல்லூரிகள், இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, பெருந்துறையில் சாலை போக்குவரத்து நிறுவனம் நடத் தும் மருத்துவக் கல்லூரி, 13 தனியார் மருத்துவக் கல்லூரி கள் ஆகியவை உள்ளன. 8 தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களிலும் மருத்துவப் படிப்பு நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 32 மாவட் டங்களில் 17 மாவட்டங்களில் 21 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 10 மாவட்டங்களில் தனியார் மருத்துவக் கல்லூரி களும் இல்லை. அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாகும்.

கிருஷ்ணகிரி உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக் கப்படும். இவ்வாறு அமைச்சர் சி.விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in