Published : 30 Mar 2014 02:54 PM
Last Updated : 30 Mar 2014 02:54 PM

தமிழகத்தில் கேஜ்ரிவால் பிரச்சாரம் இல்லை

‘தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜ்ரி வால் தமிழகம் வரவில்லை’என்று, அக்கட்சியின் தமிழக தேர்தல் பணிக்குழுத் தலைவர் டேவிட் வருண்குமார் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் 18 தொகுதிக ளுக்கான ஆம் ஆத்மி வேட்பா ளர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர். இன்னும் 5 அல்லது 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவுள்ளனர். இவர்களை ஆதரித்து அரவிந்த் கேஜ்ரிவால் பிரச்சாரம் செய்ய வாய்ப்பில்லை. வாரணாசியில் நரேந்திரமோடியை எதிர்த்து போட்டியிடுவதால், அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டியிருக்கிறது. ஏப்ரல் 19, 20-ம் தேதிகளில் பிரசாந்த் பூஷன் கன்னியாகுமரியில் எஸ்.பி.உதயகுமாருக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்வார் என்றார்.

பிரச்சாரத்துக்கு கேஜ்ரிவால் வராதது, கட்சியினரிடம் ஏமாற் றத்தை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x