

நெடுந்தீவு, தலைமன்னார் கடற்பகுதிகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று இரவு சிறைபிடித்தனர்.
கடந்த 6-ம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ராமேசு வரத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ உயி ரிழந்தார். மீனவர் ஜெரோன் காயமடைந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற் படையினர் கைது செய்தனர். இதற்கு மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில், நேற்று இரவு நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத் தனர். 8 பேரையும் கைது செய்து, படகை சிறைபிடித்துச் சென்றனர்.
அதேபோன்று, தலைமன்னார் அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.