நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் தலைமறைவான 2 பேரை கைது செய்ய சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவு

நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் தலைமறைவான 2 பேரை கைது செய்ய சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவு
Updated on
2 min read

மதுரையில் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலை மறைவாக இருக்கும் 2 பேரை கைது செய்ய சிபிஐக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் ஒரு நாளிதழ் அலு வலகம் மீது 9.5.2007-ல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி உட்பட 17 பேரை மதுரை சிபிஐ நீதிமன்றம் 2009-ல் விடுதலை செய்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றக் கிளையில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு விசாரணையை இழுத்தடித்ததால் அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் 12 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக் கப்பட்டது.

இதையடுத்து 9 பேரை சிபிஐ கைது செய்தது. ஒருவர் நீதிமன்றத் தில் சரண் அடைந்தார். தயா முத்து, திருமுருகன் என்கிற காட்டு வாசி முருகன் ஆகியோர் தலைமறை வாக உள்ளனர். கைதான 8 பேரில் சரவணமுத்து, முருகன் என்கிற சொரிமுருகன், சுதாகர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், இந்த வழக்கு உயர் நீதிமன்ற கிளை அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சிபிஐ சார்பில் வழக்கறிஞர் பி.நாகேந்திரன் ஆஜராவதற்கு எதிர்மனுதாரர்கள் சார்பில் ஆட் சேபம் தெரிவிக்கப்பட்டது. “சிபிஐ சார்பில் ஆஜராகி வந்த ஜெயக் குமார், இந்த வழக்கில் இருந்து விலகிய பிறகு, உயர் நீதிமன்றத் தின் ஒப்புதல் பெற்று ஒருவரை சிபிஐ வழக்கறிஞராக நியமனம் செய்திருக்க வேண்டும். ஆனால் வழக்கறிஞர் நாகேந்திரன் முறைப் படி நியமிக்கப்படவில்லை. இத னால் அவர் இந்த வழக்கில் ஆஜ ராகக்கூடாது” என எதிர்மனு தாரர்களின் வழக்கறிஞர் கூறினார்.

இதுகுறித்து நாகேந்திரனிடம் நீதிபதிகள் கேட்டனர். அதற்கு அவர், ‘இந்த வழக்கு விசார ணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ எஸ்பி எனக்கு கடிதம் அளித்தார். அதன் அடிப்படையில் ஆஜராகி வருகிறேன்’ என்றார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி கள், “முறைப்படி நியமனம் செய் யப்படாத வழக்கறிஞர் சிபிஐ தரப் பில் ஆஜராவதை ஏற்க முடியாது. எனவே விசாரணை அக்டோபர் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதற்குள் இந்த வழக்கில் ஆஜராகும் சிறப்பு வழக்கறிஞரை சிபிஐ முறைப்படி நியமிக்க வேண்டும்.

மேலும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ள இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

ஜாமீன் மனு விசாரணை

பிடிவாரண்ட்டில் கைது செய் யப்பட்ட ரமேஷ்பாண்டி, ராமை யாபாண்டியன், வழிவிட்டான், கந்தசாமி ஆகியோர் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். இவற்றை விசாரிக்க வேண்டும் என அவர்களது வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டனர்.

சிபிஐ சார்பில் தற்போது ஆஜராகி வரும் வழக்கறி ஞருக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் நிலையில், ஜாமீன் மனு மீது அவரது வாதங்களை எப்படி கேட்க முடியும்? என தெரிவித்த நீதிபதிகள், செப்டம்பர் 22-ம் தேதி ஜாமீன் மனுக்கள் மட்டும் விசார ணைக்கு எடுக்கப்படும் என அறி வித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in