தமிழக மீனவர்கள் 30 பேர் காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம்

தமிழக மீனவர்கள் 30 பேர் காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம்
Updated on
1 min read

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 30 பேருக்கு மீண்டும் டிசம்பர் 2 வரை காவலை நீட்டித்து இலங்கை நிதிமன்றம் உத்திரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 17 மீனவர்களையும் அவர்களின் 4 படகுகளையும், ராமேஸ்வரம் தீவைச் சேர்ந்த 13 மீனவர்களை 3 படகுகளையும் இலங்கை கடற்படை கடந்த நவம்பர் 5 அன்று கைது செய்தது.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 30 பேரையும் காங்கேசன்துறையில் உள்ள கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று மீனவர்களை விசாரித்தனர். பின்னர் யாழ்பாணம் மாவட்டம் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை விசாரித்த நீதிபதி நவம்பர் 19ம் தேதி வரை காவலில் வைத்தனர்.

இந்நிலையில் தமிழக மீனவர்கள் 30 பேரும் செவ்வாய்கிழமை மீண்டும் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை விசாரித்த மல்லாகம் நீதிபதி கஜநிதி பாலன் மீண்டும் டிசம்பர் 2 வரை காவலில் வைக்க உத்திரவிட்டார்.

பின்னர் தமிழக மீனவர்கள் 30 பேரும் மீண்டும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in