Published : 26 Sep 2016 09:17 AM
Last Updated : 26 Sep 2016 09:17 AM

இந்து தலைவர்கள் கொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக 28-ம் தேதி ஆர்ப்பாட்டம்

இந்து இயக்க தலைவர்களின் படுகொலையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் இந்து இயக்கத் தலைவர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாகிவிட்டது. இந்த படுகொலைகள் அனைத்திலுமே துப்பு துலங்காமல் உள்ளன. குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் எண்ணம் காவல்துறைக்கு இருப்பதாக தெரியவில்லை.

எனவே, இந்தப் படுகொலைகளை கண்டித்தும் இனியும் தாக்குதல் எதுவும் இந்து இயக்கத் தலைவர்கள் மீது நடத்தப்படக் கூடாது என்பதை வலியுறுத்தியும் தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகர்களில் வரும் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இந்து முன்னணி நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பாஜகவினர் கலந்துகொள்வர்.

இவ்வாறு அறிக்கையில் தமிழிசை கூறியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x