Published : 05 Feb 2017 02:08 PM
Last Updated : 05 Feb 2017 02:08 PM
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கான்சாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுமுட்டி உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு திருநெல்வேலி மாவட்ட போலீஸார் சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
கான்சாபுரத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் ஜெய்சங்கர்(29) என்பவர் மாடு முட்டி பலத்த காயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜெய்சங்கர் இறந்தார். இவருக்கு மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.
இந் நிலையில், பணியின்போது உயிரிழந்த காவலர் ஜெய்சங்கர் குடும்பத்துக்கு உதவும் வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸார் 1,659 பேர் சார்பில் ரூ.10 லட்சத்து 2 ஆயிரம் நிதி திரட்டப்பட்டது. இத்தொகையை விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜராஜனுக்கு, திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் நேற்று அனுப்பி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT