Published : 20 Jan 2015 02:19 PM
Last Updated : 20 Jan 2015 02:19 PM

சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலி

சென்னையில் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் 58 வயது நபர் ஒருவர் இறந்தார்.

சென்னையைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாசன் (58). இவர் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அவர் தனியார் மருத்துவமனையிலிருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்துள்ளார்.

அங்கு அவருக்கு டாமிப்ளூ மருந்து வழங்கப்பட்டது. ஆனால், அது அவருக்கு பலனளிக்கவில்லை. சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.

ஸ்ரீநிவாசன் பன்றிக் காய்ச்சலில் பலியானதை உறுதி செய்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள், "ஸ்ரீநிவாசனுக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். மருத்துவமனை அளித்த எச்சரிக்கையை மீறியும் அவர் சிகிச்சையை பாதியில் நிறுத்தியுள்ளார். பின்னர் அவர் இங்கு வரும்போது அவருக்கு நோய் மிகவும் முற்றியிருந்தது. எனவே கிருமிகள் கட்டுப்படவில்லை. இதனால் அவர் உயிரிழந்தார்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x