Published : 24 Mar 2017 08:41 AM
Last Updated : 24 Mar 2017 08:41 AM
ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு யார் என்பதை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் நிரூபிப்பார்கள் என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் ஜெ.தீபா தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு நிருபர்களிடம் ஜெ.தீபா கூறியதாவது:
என் மீது அன்பு வைத்திருக் கும் ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இத்தேர்தலில் அவர்கள் நல்ல முடிவை அளிப்பார்கள். ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு யார் என்பதை இத்தேர்தல் மூலம் தொகுதி மக்கள் தமிழக மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் நிரூபிப்பார்கள். இத்தேர்தல் வெற்றி எனது வாழ்க்கையில் ஒரு சரித்திரமாக அமையும்.
அதிமுகவுக்கு ஒரு நல்ல தலைமை தேவைப்படுகிறது. அது நான்தான் என்பதில் அதிமுக தொண்டர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் இந்த தேர்தல் முடிவுக்குப் பிறகு அதிமுக தலைமையை ஏற்று, கட்சியை ஜெயலலிதா வழியில் கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இத்தொகுதி மக்கள் என்னை மூன்று மாதங்களாக சந்தித்து வருகிறார்கள். முதன்முதலில் எனது இல்லத்துக்கு வந்தவர்கள் இந்த தொகுதி மக்கள்தான். அவர்களிடம் பலமுறை கலந்துரையாடியிருக்கிறேன். அதனால் இத்தொகுதி மக்களின் குறைகள் என்ன, அவர்களுக்கு என்ன தேவை என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
ஜெயலலிதா இத்தொகுதி மக்களுக்கு என்னென்ன வாக்குறுதிகள் அளித்திருந்தாரோ அவை அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவேன். நான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு பிற்பகல் 1.30 மணியளவில் வருமாறு சொல்லியிருந்தார்கள். ஆனால், அதே நேரத்தில் திட்டமிட்டு டிடிவி.தினகரன் வந்தார்.
இவ்வாறு ஜெ.தீபா கூறி னார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT