Published : 14 Jan 2017 11:34 AM
Last Updated : 14 Jan 2017 11:34 AM

கோவை மாநகராட்சி திறந்தவெளி கழிப்பிடமில்லா நகரமாக அறிவிப்பு

கோவை மாநகராட்சியை திறந்தவெளி கழிப்பிடமில்லாத நகரமாக தூய்மை பாரத இயக்கம் மற்றும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தர கவுன்சில் அறிவித்துள்ளது.

கடந்த 5, 6-ம் தேதிகளில் இந்திய தர கவுன்சில் குழுவினர் கோவை நகரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பல்வேறு குடியிருப்புகள், பொதுக் கழிப்பிடங்கள், தனிநபர் கழிப்பிடங்கள், குடிசை, வர்த்தகப் பகுதிகள், குளக்கரையை ஒட்டிய பகுதிகள், பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வறிக்கை தர கவுன்சில் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து, கோவை மாநகரை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நகரமாக அறிவித்தது. இதற்கான சான்றிதழை, தர கவுன்சிலின் திட்ட மேலாளர் புவனேஷ் ரவாத், மாநகராட்சி தனி அலுவலர் விஜய கார்த்திகேயனிடம் வழங்கினார்.

இது குறித்து தனி அலுவலர் கூறும்போது, “இந்த அறிவிப்புக் குக் காரணமாக இருந்து, ஒத்து ழைப்பு வழங்கிய பொதுமக் களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். வருங்காலங்களில் பொதுமக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்காமல் இருக்குமாறும், தனிநபர், பொது மற்றும் சமுதாயக் கழிப்பிடங்களை மட்டுமே பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன். பொது இடங்கள் மற்றும் வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாமல் இருந்தால், சம்பந்தப்பட்ட மாநகராட்சி மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். உடனடியாக கழிப்பிடம் கட்ட ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x