Published : 01 Feb 2014 12:00 AM
Last Updated : 01 Feb 2014 12:00 AM

கடலோரப் பாதுகாப்பு படை அதிகாரிகள் ரத்த தானம்

கடலோர பாதுகாப்புப் படை சார்பில் நடந்த ரத்த தான முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

சென்னையில் கடலோர பாதுகாப்பு தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சிறப்பு ரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சென்னை கடலோர பாதுகாப்புப் படை வளாகத்தில் நடந்த முகாமை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கார் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து கிழக்கு மண்டல கடலோர பாதுகாப்புப் படை கமாண்டர் சர்மா கூறுகையில், “கடலோர பாதுகாப்பு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து இந்த ரத்த தான முகாமை நடத்தியுள்ளோம்.

கடலோர பாதுகாப்புப்படை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆர்வத்துடன் ரத்த தானம் அளித்தனர்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் மேயர் சைதை சா.துரைசாமி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி டீன் கீதா லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x