Published : 25 Mar 2017 12:38 PM
Last Updated : 25 Mar 2017 12:38 PM

சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் மாற்றம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஐ.பி.எஸ். பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக கரண் சிங் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக இருந்த எஸ்.ஜார்ஜ் ஐபிஎஸ் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். அவருக்குப் பதிலாக சிபிசிஐடி கூடுதல் இயக்குநராக இருந்த கரண் சின்ஹா ஐபிஎஸ், சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்படுகிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் புகார் எதிரொலி?

சென்னை காவல்துறை ஆணையராக ஜார்ஜ் நீடித்தால், வரும் 12-ம் தேதி ஆர்.கே.நகரில் நடைபெறும் இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெறாது என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் அளித்திருந்தன. இந்தப் புகாரின் அடிப்படையில் பணியிட மாறுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போதும், மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x