Published : 04 Jun 2016 07:49 AM
Last Updated : 04 Jun 2016 07:49 AM

பாரிவேந்தர், ரவி பச்சமுத்து ஆகியோருடன் ஏற்பட்ட பிரச்சினைதான் மதன் மாயமானதற்கு காரணம்: சென்னையில் தாயார் தங்கம் உருக்கம்

பாரிவேந்தர், ரவிபச்சமுத்து, மதன் ஆகிய 3 பேருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையே மதன் மாயமானதற்கு காரணம் என மதனின் தாயார் தங்கம் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

வேந்தர் மூவிஸ் உரிமையாளர் மதன், 5 பக்கம் கொண்ட ஒரு கடிதத்தை தன்னு டைய லெட்டர் பேடில் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். அந்த கடிதத்தில் 'காசி கங்கையில் சமாதி அடைகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். கடிதத்தை எழுதி வைத்துவிட்டு சென்ற மதன் எங்கு இருக்கி றார் என்பது இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில், மதனின் தாயார் தங்கம் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: என் மகன் மதன் மாயமான விவகாரம் தொடர்பாக பத்திரிகைகளில் தொடர்ந்து தவறான தகவல்கள் வெளியாகி வருவது வேதனையளிக்கிறது. அவர் கடத்தப்பட்டாரா, கொலை செய்யப்பட் டாரா என்பது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் தெரியாது. அவரை கண்டுபிடித்துத் தர விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்திலும், சென்னை போலீஸ் கமிஷனரிடமும், முதல்வர் தனிப் பிரிவிலும் புகார் மனுக்களை அளித்துள்ளோம். மதன் மாயமானதைத் தொடர்ந்து பாரிவேந்தரையும், ரவி பச்சமுத்துவையும் பார்க்க முயற்சித்தோம். ஆனால், அவர்களை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை.

மதன், பாரிவேந்தரை பூஜை அறை யில் வைத்து பூஜிப்பவன். பாரிவேந்தர், ரவிபச்சமுத்து, மதன் ஆகிய 3 பேருக்கும் இடையே ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்சினையே மதன் மாயமானதற்கு காரணமாக இருந்துள்ளது என நினைக்கிறேன். இந்த ஆண்டில் 102 பேர் மருத்துவம் படிக்க பணம் வாங்கியிருப்பதாகவும், அந்த பணத்தை எஸ்ஆர்எம், எம்ஜிஎம் குழுமத்திடம் வாங்கிக் கொள்ளுங்கள் என மதன் கடைசியாக எழுதிய கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, மதன் எந்த மோசடியிலும் ஈடுபடவில்லை. அவர் எதற்கு வெளியே சென்றுள்ளார் என்பது தொடர்பாக அவர் நேரில் வந்தால்தான் தெரியும். கடந்த 28-ம் தேதிதான் என்னுடன் கடைசியாக மதன் பேசினார். எனவே, அவரை மீட்டுத் தர வேண்டுமென வலியுறுத்துகிறேன் என கண்ணீர் மல்க கூறினார். மதன் மனைவி சுமலதா, ‘‘என் கணவர் நல்லவர். அவரை மீட்டுக் கொடுங்கள்’’ என கூறி அழுதார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x