குண்டர் சட்டத்தில் 13 பேர் சிறையில் அடைப்பு

குண்டர் சட்டத்தில் 13 பேர் சிறையில் அடைப்பு
Updated on
1 min read

சென்னையில் குண்டர் சட்டத்தில் 13 பேர் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தொடர் குற்றச்சாட்டில் ஈடுபடுபவர்களை சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து வருகிறார்.

அதன்படி, தொடர் குற்றத்தில் ஈடுபட்டதாக வண்ணாரப்பேட்டை அமன்பாஷா (61), வியாசர்பாடி கணேஷ் (51), செங்குன்றம் ராஜா உள்பட 13 பேரை குண்டர் சட்டத்தில் காவல் ஆணையர் சிறையில் அடைத்து உத்தரவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in