

10 ரூபாய் நாணயங்கள் சட்டப் படி செல்லத்தக்கவை. எனவே அவற்றை பொதுமக்கள் தொடர்ந்து ஏற்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட நாண யங்களைப் புழக்கத்தில் விடுகிறது. நாணயங்கள் நீண்ட காலத்துக்குப் புழக்கத்தில் இருக்கும். ஆகவே, வெவ்வேறு வடிவங்கள், அளவு களில் உள்ள நாணயங்கள் புழக் கத்தில் இருக்க வாய்ப்புண்டு. இதில் செய்யப்பட்ட ஒரு மாற்றம் என்னவெனில், ஜூலை 2011-ல் நாணயங்களில் ‘ரூபாய்’ குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது. உதார ணமாக, ரூ.10 நாணயங்கள் ரூபாய் குறியீட்டுடனும், ரூபாய் குறியீடு இல்லாமலும் வெளியிடப்பட்டுள் ளன. அவை சற்றே மாறுபட்டுத் தோன்றினாலும், இரண்டுமே சட்டப் படி செல்லுபடியாகக் கூடியவை.
இதுகுறித்த விவரங்களை அறியாத சிலர், இத்தகைய நாண யங்களின் நம்பகத்தன்மை குறித்து சாதாரண மனிதர்கள் மற்றும் வியாபாரிகள் மனதில் குழப் பத்தை உருவாக்கி இந்த நாணயங் களின் புழக்கத்துக்கு குந்தகம் விளைவித்து வருவதாகத் தெரிய வந்துள்ளது. எனவே, பொதுமக்கள் இத்தகைய குழப்பமான தகவல் களுக்கு மதிப்புத் தராமல், அவற்றை ஒதுக்கித் தொடர்ந்து இந்த நாண யங்களைத் தங்களின் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் தயக்க மின்றி பயன்படுத்தலாம்.