Published : 11 Jun 2017 10:40 AM
Last Updated : 11 Jun 2017 10:40 AM

திருவாரூரில் 14-ம் தேதி நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் திமுக பங்கேற்கும்: கே.பி.ராமலிங்கம் அறிவிப்பு

மத்திய பாஜக அரசைக் கண்டித்து வரும் 14-ம் தேதி திருவாரூரில் விவசாயிகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் திமுக பங்கேற்கும் என அக்கட்சியின் விவசாய அணிச் செயலாளர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மத்தியப் பிரதேசத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகி உள்ளனர். வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழக விவசாயிகள் 41 நாட்கள் டெல்லியில் போராடியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசையும், அதை எதிர்த்து குரல் கொடுக்காத தமிழக அரசையும் கண்டித்தும் வரும் 14-ம் தேதி திருவாரூரில் அனைத்து விவசாய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்படி இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக பங்கேற்கும்.

இவ்வாறு அறிக்கையில் கே.பி.ராமலிங்கம் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x