ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம்

ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம்
Updated on
1 min read

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரி களை இடமாற்றம் செய்து உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம்:

சென்னை அடையாறு துணை ஆணையர் அபினவ் குமார் சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையராகவும், திருப் பூர் தலைமையிடத்து துணை ஆணையர் பி.சுந்தரவடிவேல் அடையாறு துணை ஆணையராக வும், சென்னை தலைமையிடத்து துணை ஆணையர் எஸ்.ஆர்.செந் தில்குமார் சென்னை மத் திய குற்றப்பிரிவு துணை ஆணையராகவும், மதுரை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஏ.ராதிகா சென்னை காவல் நிர்வாகப் பிரிவு துணை ஆணையராகவும், சமூக நீதி மற்றும் உதவி ஐஜி எஸ்.மணி சென்னை காவல் நவீன கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராகவும் நியமிக்கப்பட் டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in