Published : 22 Jan 2014 11:30 AM
Last Updated : 22 Jan 2014 11:30 AM

சென்னை விமான நிலையத்தில் 14-வது முறையாக கண்ணாடி உடைந்தது

சென்னை விமான நிலையம் புதுப்பிக்கப்பட்ட பின்னர் 14-வது முறையாக கண்ணாடி உடைந்து கீழே விழுந்தது.

சென்னை விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட மேற்கூரை இடிந்து விழுவதும், கண்ணாடிகள் உடைவதும் தொடர்கதையாக நடந்து வருகின்றன. இதுவரை 8 முறை மேற்கூரையும், 13 முறை கண்ணாடிகளும் உடைந்துள்ளன. இந்நிலையில் செவ்வாய் கிழமை காலையில் உள்நாட்டு விமான நிலையத்தின் 4-வது நுழைவு வாசலில் உள்ள முகப்பு கண்ணாடி கதவு உடைந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து அந்த வாசல் அடைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x