Published : 16 Mar 2017 04:15 PM
Last Updated : 16 Mar 2017 04:15 PM
புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படாத வரவு-செலவுத் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படாத வரவு-செலவுத் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். ஆனால், தமிழக அரசின் கடன் சுமை தாங்க முடியாத அளவிற்கு பெருகியுள்ளது. இந்தச் சுமையைக் குறைக்க சிறப்பு நிதி உதவி வழங்க வேண்டும் என மத்திய அரசை வற்புறுத்தும் கோரிக்கை முன் வைக்கப்படவில்லை.
வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வளர்ச்சித் திட்டம் எதுவும் அறிவிக்கப்படாததைக் கண்டிக்கிறேன்'' என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT