Published : 26 Feb 2017 11:04 AM
Last Updated : 26 Feb 2017 11:04 AM

தங்கம் ரூ.23 ஆயிரத்தை நெருங்கியது

சர்வதேச அளவில் தங்கம் விலையில் தொடர்ந்து உயர்வு இருப்ப தால் உள்ளூரிலும் ஒரு பவுன் விலை நேற்று ரூ.23 ஆயிரத்தை நெருங்கியது. கடந்த 2 நாட்களில் மட்டுமே தங்கம் விலை பவுனுக்கு ரூ.312 உயர்ந்துள்ளது.

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயரும்போதெல்லாம் உள்ளூரிலும் தங்கம் விலை உயர்கிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக, கடந்த 2 நாட்களில் மட்டுமே பவுனுக்கு ரூ.312 உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.2,850-க்கும், ஒரு பவுன் ரூ.22,800-க்கும் விற்கப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.13 என பவுனுக்கு ரூ.104 உயர்ந்தது. இதனால் ஒரு கிராம் ரூ.2,863-க்கும், ஒரு பவுன் ரூ.22,904-க்கும் விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x