Published : 05 Feb 2014 12:00 AM
Last Updated : 05 Feb 2014 12:00 AM
எங்கள் கூட்டணிக்கு தேமுதிக வந்தால் அவர்களை திருச்சியில் நடக்கும் திமுக மாநாட்டில் பங்கேற்க அழைப்போம் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நிருபர்களுக்கு ஸ்டாலின் அளித்த பேட்டி:
திமுக 10-வது மாநில மாநாட்டுக்காக திருச்சியில் சிறப்பான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நடக்கும் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனை மாநாடாக அமையும்.
அதிமுக ஆட்சியின் அவலங்களையும் முந்தைய திமுக அரசின் சாதனைகளையும் விளக்கி, தமிழகம் முழுவதும் இளைஞரணி சார்பில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார். பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:
திமுக கூட்டணியில் வேறு கட்சிகள் இடம்பெறுமா?
ஏற்கெனவே உள்ள கட்சிகள் கூட்டணியில் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பதை திமுக தலைவர் அறிவிப்பார்.
திமுக மாநாட்டில் பங்கேற்க மற்ற கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுமா?
கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேமுதிகவுக்கு அழைப்பு விடுப்பீர்களா?
திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால், அவர்களை அழைப்போம்.
இவ்வாறு ஸ்டாலின் பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT