Published : 28 Oct 2013 04:37 PM
Last Updated : 28 Oct 2013 04:37 PM

தமிழக மீனவர்கள் 56 பேரின் காவல் நவ.11 வரை நீட்டிப்பு

ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் 56 பேர்களின் காவலை, இலங்கை நீதிமன்றங்கள் நவம்பர் 11 நீட்டித்து உத்திரவிட்டது.

கடந்த செப்டம்பர் 19-ம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து, கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று எல்லை கடந்து மீன்பிடித்தாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 19 மீனவர்கள் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அக்டோபர் 14 அன்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர்களும், பாக் நீரிணைப்பு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா பட்டிணம், கோட்டைப்பட்டிணத்தை சேர்ந்த மீனவர்கள் 15 பேர் என 37 மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்து ராமேஸ்வரம் மீனவர்களை வவுனியா சிறையிலும், புதுக்கோட்டை மீனவர்களை யாழ்பாணம் சிறையிலும் அடைத்தனர்.

தமிழக மீனவர்கள் 56 பேரின் காவல் திங்கட்கிழமையோடு முடிவடைந்ததையடுத்து மீண்டும் யாழ்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் 34 புதுக்கோட்டை மீனவர்களும், ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

யாழ்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் மீனவர்கள் 34 பேரை நவம்பர் 11 வரை காவலை நீதிபதி நீட்டித்து உத்திரவிட்டார். இதனையடுத்து மீண்டும் 34 புதுக்கோட்டை மீனவர்கள் யாழ்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை விசாரித்த மன்னார் நீதிமன்ற நீதிபதி நவம்பர் 11 வரையிலும் காவலை நீட்டித்து, வவுனியா சிறையில் மீண்டும் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x