Published : 19 Jul 2016 08:57 AM
Last Updated : 19 Jul 2016 08:57 AM
தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர் கலைச்செல்வி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீஸார் தீவிரமாக செயல்பட்டு ராம்குமார் என்ற இளைஞரை கைது செய்துள்ளனர். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சுவாதியின் கண்ணியத்தையும், நற்பெயரையும் இழிவுபடுத்தும் வகையில் பேசுகிறார். மத பிரிவினை வாத குற்றங்களை தூண்டும் விதத் தில் ரம்ஜானுக்கு சுவாதி நோன்பு இருந்ததாக ஆதாரமில்லாத அவ தூறுகளை தெரிவித்துள்ளார். மேலும், பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்களை தூண்டும் வகையிலும் பேசுகிறார்.
அவரது பேச்சு, சுவாதி கொலை யில் கைதான ராம்குமாருக்கு மட்டு மின்றி பல குற்றவாளிகளுக்கும் ஆதரவாக இருக்கிறது. இந்து, முஸ்லிம்களிடையே மத மோதல் களை உருவாக்கும் நோக்கத்துடன் உள்ளது. எனவே, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தூண்டி வரும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT