Published : 02 Jan 2016 10:40 AM
Last Updated : 02 Jan 2016 10:40 AM
‘தி இந்து’ நாளிதழ், சென்னை மாநகராட்சி, சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை, போக்குவரத்து மற்றும் வளர்ச்சிக் கொள்கை நிறுவனம் (ஐடிடிபி) சார்பில், ‘நம்ம சென்னை நமக்கே’ என்ற கருப்பொருளுடன், சென்னையில் முதன்முறையாக ‘கார்கள் இல்லாத ஞாயிறு’ விழா பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் அக்டோபர் 11-ல் தொடங்கப்பட்டது.
இவ்விழா ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 6 முதல் காலை 9 மணி வரை நடைபெறுகிறது. இவ்விழாவின்போது 800 மீட்டர் நீளம் கொண்ட எலியட்ஸ் கடற்கரை சாலையில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும்.
பின்னர் அந்த சாலையில் இசை நிகழ்ச்சிகள், யோகா மற்றும் உடற்பயிற்சி ஆகியவை நடைபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT