Published : 14 Jun 2017 09:55 AM
Last Updated : 14 Jun 2017 09:55 AM

திமுக முன்னாள் எம்எல்ஏ, தொமுச தலைவர் பேரூர் நடராஜன் மரணம்: மு.க.ஸ்டாலின் அஞ்சலி

திமுக தொழிற்சங்கப் பேரவை யான தொமுச-வின் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏ வுமான பேரூர் ஆ.நடராஜன், தனது 78-வது பிறந்த நாளான நேற்று மரணமடைந்தார்.

பேரூர் ஆ.நடராஜன், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்த நிலையில், நேற்று அதிகாலை மரணமடைந்தார். கோவை மதுக்கரை மார்க்கெட்டில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

4 முறை எம்எல்ஏ

திமுகவில் பல்வேறு பொறுப்பு களை வகித்த இவர், 6 முறை தேர்தலில் போட்டியிட்டு 1977, 1984, 1989, 1996 என 4 முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டார். இவருக்கு சுதா, ராணி என 2 மகள்கள் உள்ளனர்.

கோவை வந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறும்போது, “4 முறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந் துள்ள ஆ.நடராஜன், பேரூர் தொகுதியில் பல்வேறு திட்டங் களைச் செயல்படுத்தியுள்ளார். கட்சி, தொழிற்சங்கத்தில் சிறப் பாகப் பணியாற்றியுள்ளார். அண் மையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், தொடர்ந்து கட்சிப் பணிகளை மேற்கொண்டார். அவரது குடும்பத் தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

முன்னாள் அமைச்சர்கள் மு.கண்ணப்பன், பொங்கலூர் பழனிசாமி, தொமுச மாநில துணைத் தலைவர் ரத்தின வேலு, முன்னாள் எம்.பி. விடுதலை விரும்பி மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் அஞ்சலி செலுத்தினர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x