Published : 24 Aug 2016 08:47 AM
Last Updated : 24 Aug 2016 08:47 AM
சென்னை புதுவண்ணாரப் பேட்டை பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் ராஜு (45). இவர் குடும்பத்தோடு வேளாங்கண் ணிக்கு சென்று விட்டு, நேற்று காலையில் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. சமையல் அறையிலும் பாத்திரங்கள் சிதறிக் கிடந்தன.
பீரோவில் நகை, பணம் எதுவுமே இல்லாததால் ஏமாற் றம் அடைந்த திருடர்கள் பிரிட்ஜில் இருந்த முட்டையை எடுத்து ஆம்லெட் போட்டு சாப்பிட்டுள்ளனர். மேலும், பிரிட்ஜில் இருந்த பழங்களையும் சாப்பிட்டுவிட்டு, மீதமிருந்த பழங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
புகாரின்பேரில் புது வண்ணாரப்பேட்டை போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT