Published : 23 Sep 2016 09:03 AM
Last Updated : 23 Sep 2016 09:03 AM
திண்டுக்கல்லில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தமிழக அரசையும், முதல்வர் குறித்தும் அவதூறாக பேசிய தாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது திண்டுக் கல் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 2013-ல் அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டா லின் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், மாநில அரசின் செயல் பாடுகள் குறித்து நியாயமான விமர்சனங்கள், கருத்து தெரி விக்க எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு. அதற்காக அவதூறு வழக்கு தொடர முடியாது.
இதனால் அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும். விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக் குப் பின் ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை திண்டுக்கல் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT