Published : 19 Jun 2017 09:29 AM
Last Updated : 19 Jun 2017 09:29 AM
நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏற்றுமதியாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், புதிதாக அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி வரி ஏற்றுமதி துறைக்கு சாதகமாக இருக்கும் என இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (பியோ) தென்மண்டல தலைவர் டாக்டர் ஏ.சக்திவேல் கூறியதாவது:
நாட்டின் ஏற்றுமதி தொடர்ச்சி யாக அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதத்துக்கான ஏற்றுமதி யும் அதிகரித்துள்ளது. இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஏற்றுமதி துறைக்கு உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து சுட்டிக் காட்டியுள்ளது. இப்பிரச்சினைகள் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தீர்க்கப்படும் என நம்புகிறோம். இதன்மூலம், வரும் காலங்களில் நாட்டின் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும்.
பொறியியல், கற்கள் மற்றும் நகைகள், பெட்ரோலியம், ஜவுளி, ஆயத்த ஆடைகள், இயற்கை மற்றும் செயற்கை ரசாயனம் மற் றும் மரைன் ஏற்றுமதி ஆகிய துறை கள் அதிகளவு வேலை வாய்ப்பு உருவாக்குவதில் முக்கிய பங் காற்றி வருவதால் அத்துறையை பிரபலப்படுத்த வேண்டும். அந் நிய வர்த்தக கொள்கையில் இதற்காக தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.
வங்கதேசம், இலங்கை, வியட் நாம் ஆகிய நாடுகளுக்கு விருப்ப மான பொதுவான அமைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால் ஜவுளித்துறையில் வரும் ஆண்டு களில் இந்தியாவுக்கு கடும் போட்டியாக அமையும். இப் போட்டிகளை ஏற்றுமதியாளர்கள் சமாளிக்க வேண்டும் என்றார்.
வங்கதேசம், இலங்கை, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு விருப்பமான பொதுவான அமைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால் ஜவுளித்துறையில் வரும் ஆண்டுகளில் இந்தியாவுக்கு கடும் போட்டியாக அமையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT