Published : 31 Mar 2017 08:55 AM
Last Updated : 31 Mar 2017 08:55 AM

பிளஸ் 2 தேர்வு இன்றுடன் முடிகிறது: ஏப்.5-ல் திருத்தும் பணி

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்றுடன் (மார்ச் 31) முடி வடைகிறது. இதையடுத்து விடைத் தாள் திருத்தும் பணி ஏப்.5-ல் தொடங்குகிறது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வில் பங்கேற்று வருகிறார்கள். இந்த நிலையில், கடைசி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன.


தேர்வுகள் முடிவடையும் நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 5-ம் தேதி தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 64 மையங்களில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட இருப்பதாக அரசு தேர்வுத் துறையினர் தெரிவித்தனர்.

மே 12-ல் முடிவுகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 12-ம் தேதியும், எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதியும் வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x