பொது இடங்களில் செய்யப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களை அரசியல் கட்சிகளே ஒரு மாதத்தில் அழிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பொது இடங்களில் செய்யப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களை அரசியல் கட்சிகளே ஒரு மாதத்தில் அழிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சுவர் விளம்பரங்களை தங்களது சொந்த செலவில் ஒரு மாதத்தில் அழிக்க வேண்டுமென அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளையும் அறிவுறுத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராஃபிக் ராமசாமி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே பொது நல வழக்கு தொடர்ந்திருந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “சாலைகளின் நடுவே உள்ள தடுப்புகள், சுவர்கள், நிழற்சாலையில் உள்ள மரங்கள், பாறைகள், மலைகள் போன்ற இடங்களில் அரசியல் மற்றும் மதம் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் செய்வதைத் தடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகா தேவன் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு நேற்று பிறப்பித்த இடைக்கால உத்தரவு: சுவர் விளம்பரங்கள் செய்த அரசியல் கட்சிகள் தங்களது சொந்த செலவில் அவற்றை அழிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைத்து அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் 15 நாட்களுக்குள் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். சுவர் விளம்பரங்களை அழிப்பதற்கு அரசியல் கட்சிகளுக்கு ஒருமாதம் கால அவகாசம் அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் மேற்கண்ட இடங்களில் அரசியல் கட்சிகள் சுவர் விளம்பரம் செய்யமாட்டார்கள் என நம்புகிறோம்.

மேற்கண்ட பொது இடங்களில் விளம்பரம் செய்வோர் மீது நடவடிக்கை எடுத்த பிறகும், தொடர்ந்து அதுபோன்ற விளம் பரங்களை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

பொதுச் சொத்துகளை பாழாக்கும் வகையில் உள்ள விளம் பரங்களை அழிக்க வேண்டும். அதற் கான செலவை விதிமீறல் செய்த வர்களிடம் வசூலிக்க வேண்டும் சம்பந்தப்பட்ட வர்கள் மீது வழக்கு தொடர வேண்டும். அவ்வாறு வழக்கு தொடர்ந்தால் அதுகுறித்த விவரங்களை நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசார ணையை செப்டம்பர் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in