Published : 19 Jun 2017 09:31 AM
Last Updated : 19 Jun 2017 09:31 AM

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசின் பத்ம விருதுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்

பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் பெறத் தகுதியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து, திருவள்ளூர் செய்தி - மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. தேசத்துக்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தந்து, பல்வேறு துறைகளில் தன்னலமிக்க பொது சேவை ஆற்றியவர்களுக்கான இந்த விருதுகள் 2018-ல் நடைபெறும் குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளன.

இந்த விருதுகளைப் பெற தகுதியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், www.padmaawards.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை மாவட்ட ஆட்சி யரின் ஒப்புதலுடன், ‘உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116ஏ, ஈவெரா பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை-600 084’ என்ற முகவரிக்கு வரும் 25-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை, அலுவலக நேரங்களில் 044-27666249; 7401703482 ஆகிய தொலைபேசி மற்றும் அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x