Published : 03 Jan 2017 08:00 AM
Last Updated : 03 Jan 2017 08:00 AM
திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டையை அடுத்த ஜாம்புவா னோடை தர்கா பகுதியைச் சேர்ந் தவர் மதியழகன். இவர் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார். அதில், 3 வயதுடைய ஒரு பசுங்கன்றும் ஒன்று.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 27-ம் தேதி மதியழகனின் வீட்டுக்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த ராஜ ரத்தினம் என்பவர், 3 வயதுடைய பசுங்கன்று தன்னுடையது என்று கூறினார். கடந்த சில மாதங்களுக்கு முன், கடைவீதி பகுதியில் மேய் வதற்கு வந்த கன்றுக்குட்டி காணா மல் போய்விட்டது, அதுதான் இது என்றார்.
இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, இதுகுறித்து இருவரும் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தக் குழப்பத்தை எப்படி தீர்ப்பது என யோசித்த போலீஸார், இருவரின் வீட்டிலும் உள்ள இதன் தாய்ப்பசு எது என நினைக்கிறீர்களோ அதை ஓட்டிக்கொண்டுவருமாறு கூறினர். கன்றுக்குட்டி, எந்தப் பசு விடம் செல்கிறதோ அந்தப் பசுவின் உரிமையாளர்தான் கன்றுக்கும் உரிமையாளர் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றனர்.
அதன்படி, இருவரும் பசுக்களை காவல் நிலையத்துக்கு ஓட்டிவந்தனர். கன்றுக்குட்டி மதி யழகனின் பசுவிடம் சென்றதை யடுத்து, கன்றுக்குட்டியை போலீ ஸார், அவரிடம் ஒப்படைத்தனர். இந்த முடிவை ஏற்க முடியாது என்று அதிருப்தி தெரிவித்த ராஜரத்தினம் தரப்பினர், நேற்று காலை மதியழகனின் வீட்டுக்குச் சென்று கன்றுக்குட்டியைத் தூக்கிச் சென்றுவிட்டனர்.
இதனால், இருதரப்புக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்ப்பட்டதால், கன்றுக்குட்டி யையும் 2 பசுக்களையும் பறிமுதல் செய்த போலீஸார் அவற்றை காவல் நிலைய வளாகத்தில் கட்டி வைத்துள்ளனர்.
இந்தக் குழப்பத்துக்கு தீர்வு காண, கால்நடை மருத்துவக் குழு வினரை அழைத்து கன்றுக்குட்டி மற்றும் 2 பசுக்களின் ரத்த மாதி ரியை எடுத்து டிஏன்ஏ பரிசோதனை செய்வது என போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT