Published : 26 May 2017 09:03 AM
Last Updated : 26 May 2017 09:03 AM

கவிஞர் நா.காமராசன் மறைவு: முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

கலைமாமணி விருது பெற்ற கவிஞர் நா.காமராசன் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவரு டைய மறைவுக்கு தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கைகள் விபரம்:

முதல்வர் கே.பழனிசாமி:

திரைப்பட பாடலாசிரியரும், புதுக்கவிதை இயக்க முன்னோடி யும் கவிஞருமான நா.காமராசன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:

கவிஞர் காமராசன் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச் சிக்கு ஆளாகியிருக்கிறேன். அவர் மொழிப் போராட்டத்தின்போது பல்வேறு தியாகங்களை செய்த வர். அவர் ஒரு மிகப்பெரிய கவிஞ ராக, இலக்கியத்துறையில் மட்டு மல்லாமல் திரைப்படத்துறையிலும் கொடிகட்டிப் பறந்தவர். அவரை இழந்து வாடும் அவரது குடும் பத்தினர், நண்பர்கள், உற்றார், உறவினர்களுக்கு என்னுடையை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்:

கவிஞர் நா.காமராசன் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி யினை அறிந்து மிகுந்த வேதனை யும், துயரமும் அடைந்தேன். நா.காமராசன் மறைவு அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்:

எம்.ஜி.ஆரின் ஆட்சியில் அரசவை கவிஞராக சிறப்பாக பணியாற்றியவர் நா.காமராசன். பழகுவதற்கு இனியவர். எளிமை யானவர். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திக தலைவர் கி.வீரமணி:

தமிழ் திரைப்பட பாடலாசிரியர் நா.காமராசன் நேற்றிரவு கால மானார் என்பது துயரமிக்க செய்தி யாகும். அவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x