Published : 22 Feb 2014 09:30 AM
Last Updated : 22 Feb 2014 09:30 AM

காங்கிரஸுடன் கூட்டணி வேண்டாம்: திமுகவினர் கருத்து

வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலின்போது காங்கி ரஸுடன் கூட்டணி சேர வேண்டாம் என பலரும் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 1200 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து, வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேர்காணலை நடத்தினர். முதல்நாளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

வெள்ளிக்கிழமை 2-வது நாளாக திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களுக்கு நேர்காணல் நடந்தது. இதில் பங்கேற்றவர்களிடம் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்ற கேள்வி கேட்கப்பட்டதாக தெரிகிறது. காங்கிரஸுடன் கூட்டணி வேண்டாம் என பலரும் கருத்து கூறியதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x