Published : 21 Apr 2017 10:13 AM
Last Updated : 21 Apr 2017 10:13 AM
முன்னணி கார் தயாரிப்பு நிறுவன மான ஹூண்டாய் புதிய எக்ஸெண்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. காம்பாக்ட் செடான் வகையிலான இந்த கார் எக்ஸெண்ட் வரிசையில் மேம்படுத்தப்பட்டதாகும். பெட்ரோ லில் இயங்கும் வகையிலான ஆறு மாடல்களும், டீசலில் இயங்கும் ஐந்து மாடல்களும் இந்த புதிய எக் ஸெண்ட் வரிசையில் கிடைக்கும்.
வாடிக்கையாளர்களின் விருப் பங்களும், மக்களின் ரசனைகளும் வேகமாக மாறி வருகிறது. இதற்கு ஈடுகொடுப்பதற்கான செயல்கள்தான் ஹூண்டாய் நிறுவனத்தின் முக்கிய ஆதாரம் என்று, இந்த காரின் அறிமுக நிகழ்ச்சியில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஒய் கே கூ கூறினார்.
மாறிவரும் சந்தைப் போக்கு களை புரிந்து கொண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். வாடிக்கையாளர்களின் கருத்து களைக் கேட்டு அதற்கேற்ப எங்களது தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்துகிறோம் என்றார்.
2014-ம் ஆண்டிலிருந்து இப்போதுவரை இந்திய சந்தையில் 2.5 லட்சம் எக்ஸெண்ட் கார்கள் விற்பனையாகியுள்ளன. தற்போது புதிய எக்ஸெண்ட் மாடலும் இந்த பிரிவில் புதிய மைல்கல்லை தொடும் என்று நம்புவதாக குறிப்பிட்டார்.
ஒட்டுமொத்தமாக கடந்த ஆண் டில் 6.62 லட்சம் கார்களை ஹூண் டாய் விற்பனை செய்துள்ளதாகவும் கூ குறிப்பிட்டார். உள்நாட்டுச் சந்தையில் 5 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றும், பயணிகள் வாகன சந்தையில் 17 சதவீதத்தை ஹூண்டாய் வைத்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
புதிய எக்ஸெண்ட் பெட்ரோல் வகை ரூ.5.38 லட்சத்திலிருந்து ரூ.7.51 லட்சமாகும். டீசல் வகை ரூ.6.28 லட்சத்திலிருந்து ரூ. 8.41 லட்சமாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT