Published : 13 Jul 2016 07:46 PM
Last Updated : 13 Jul 2016 07:46 PM
நாடாளுமன்ற அதிமுக குழு தலைவராக மீண்டும் டாக்டர் பி.வேணுகோபாலை நியமித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் அறிவித்துள்ளதாவது:
அதிமுக நாடாளுமன்ற குழு மற்றும் மாநிலங்களவை குழு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் படி, நாடாளுமன்ற குழு தலைவராக பி.வேணுகோபால், துணைத்தலைவராக ஏ.நவநீத கிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
நாடாளுமன்ற மாநிலங்களவைக்குழு தலைவராக ஏ.நவநீதகிருஷ்ணனும், துணைத்தலைவராக எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், கொறடாவாக விஜிலா சத்தியானந்த், பொருளாளராக ஏ.கே.செல்வராஜ், செயலாளராக ஏ.விஜயகுமார் ஆகியோரும் நியமிக்கப்படுகின்றனர்.
ஓட்டுனர் அணி கூட்டம்
அதிமுகவின் அமைப்புசாரா ஓட்டுனர் அணியின் ஆலோசனைக் கூட்டம், இம்மாதம் 15- ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை மாவட்டம் தோறும் நடக்கிறது. அமைப்புசாரா ஓட்டுனர் அணியின் செயலாளர் ஏ.கமலக்கண்ணன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். இதில், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், உள்ளாட்சி தேர்தல் பணி போன்றவை குறித்து விவாதிக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT