Published : 07 Jul 2016 10:25 AM
Last Updated : 07 Jul 2016 10:25 AM
கூட்ட நெரிசலை கருத்தில்கொண்டு சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை எழும்பூரில் இருந்து வரும் 9-ம் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82601) மறுநாள் மதியம் 12.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
இதேபோல், திருநெல்வேலியில் இருந்து வரும் 10-ம் தேதி மாலை 5.20 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82602) மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT